குமரி அனந்தன் இல்லையென்றால் தமிழிசையை மக்களுக்கு தெரியாது: அமைச்சர் பொன்முடி பதிலடி

போடி: ‘குமரி அனந்தன் இல்லையென்றால் அவரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது’என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தேனி மாவட்டம், போடியில் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு: அண்ணாவின் கூற்றுப்படி தமிழகத்தில் நமது தாய்மொழியான தமிழ் மற்றும் உலக மொழியான ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே போதுமானது. இதில் மூன்றாவது மொழி தேவை இல்லை. இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் தமிழகம் மூன்றாவது இடம் வகிப்பதற்கு காரணம், அந்த துறையின் அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தான்.
சென்னை பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பட்டமளிப்பு விழா மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் முயற்சியால் நடத்தப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றேன். அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு எடுக்க வேண்டியவர் முதலமைச்சர் தான். என்னை பொறுத்தவரை துணை முதலமைச்சர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் வாய்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அது குறித்து பேசுவதற்கு தமிழிசை யார்? குமரி அனந்தன் இல்லையென்றால் அவரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது. இளமைப் பருவத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளில் வளர்ந்த உதயநிதி ஸ்டாலின், வருங்காலங்களில் இளைஞர்களின் வழிகாட்டியாக அமைவார். இவ்வாறு கூறினார்.

The post குமரி அனந்தன் இல்லையென்றால் தமிழிசையை மக்களுக்கு தெரியாது: அமைச்சர் பொன்முடி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: