போடி அருகே சூதாடிய 6 பேர் கைது

போடி, செப்.18: போடி அருகே பணம் சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். போடி தாலுகா எஸ்ஐ விஜய் தலைமையிலான போலீசார் சங்கராபுரத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்பனசாரிபட்டி காளியம்மன் கோயில் பகுதியில் மரத்தடியில் பணம் வைத்து சூதாடிய குப்பநாயக்கன்பட்டி முருகன் (59), குப்பனாசாரிபட்டி ராம்குமார் (39), கார்த்திக் (31), முருகானந்தம் (31), பொன்ராஜ் (70) சின்ன பொட்டிபுரம் ராமகிருஷ்ணன் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.600 ரொக்கப்பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post போடி அருகே சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: