சிவகாசி பிஎஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

 

சிவகாசி, செப்.13: சிவகாசி பிஎஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் பிரைட்லின்ஸப்னா தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் பிஎஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், பிஎஸ்ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிஎஸ்ஆர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்களும், துறை சார்ந்த பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

The post சிவகாசி பிஎஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Related Stories: