பொதுக்கூட்டம்

பெரியகுளம், செப். 20: பெரியகுளம் நகர பாமக சார்பில் சமூக நீதி விளக்க பொதுக்கூட்டம் தென்கரை திருவள்ளுவர் சிலை அருகே நகர செயலாளர் முத்தையா தலைமையில் நடந்தது. இதில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

கூட்டத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் 57 பேர் கௌரவிக்கப்பட்டனர். பாமக செயலாளர் ரா.வடிவேல் ராவணன், தேனி அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் சரவணகுமார், பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: