மர்ம நபர்கள் மடத்தில் நுழைந்து திருட முயற்சி சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே

குடியாத்தம், செப்.20: குடியாத்தம் அருகே மடத்தில் நுழைந்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பள்ளி கிராமத்தில் வள்ளிமலை ஆதீனம், சிவானந்த வாரியார் சுவாமிகள் குமாரமடம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதினத்தில் மர்ம நபர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது, அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவின் அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மடத்தின் ஊழியர்கள் இதுகுறித்து அருகே இருந்த கிராம மக்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து கிராம மக்கள் வருவதை அறிந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியது. இதற்கிடையில் தகவலின்பேரில் குடியாத்தம் தாலுகா போலீசார் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

The post மர்ம நபர்கள் மடத்தில் நுழைந்து திருட முயற்சி சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: