பூங்கா வளாகத்தில் செடிகளுக்கு தீவைப்பு பாம்பன் பாலத்தை சூழ்ந்த புகை மண்டலம்

மண்டபம்,செப்.20: மண்டபம் கடற்கரை பூங்கா வளாகத்தில் திடீரென மரம் செடிகள் தீப்பிடித்து எரிந்ததால், பாம்பன் சாலை பாலத்தில் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மண்டபம் அருகே பேரூராட்சி கடற்கரை பூங்காவில் திடீரென மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டது. இதனால் மரம் செடி, முள்புதர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் மண்டபத்தில் இருந்து பாம்பன் சாலை பாலத்தின் நுழைவு பகுதியில் பெரும் புகைமண்டலமாக காணப்பட்டது.

இதனால் ராமநாதபுரத்தில் இருந்து பாம்பன் சாலை பாலம் வழியாக ராமேஸ்வரம் சென்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தில் சென்ற பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. பாம்பன் பகுதியில் இருந்து சாலை பலத்தை பார்க்கும்போது புகை மண்டலமாக காணப்பட்டதால், பதட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். இது குறித்த தகவல் அறிந்த மண்டபம் தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

The post பூங்கா வளாகத்தில் செடிகளுக்கு தீவைப்பு பாம்பன் பாலத்தை சூழ்ந்த புகை மண்டலம் appeared first on Dinakaran.

Related Stories: