சாத்தூரில் மக்காச்சோளம் நடும் பணி தீவிரம்

சாத்தூர், செப்.20: சாத்தூர் பகுதியில் விளை நிலங்களில் மக்காச்சோளம் நடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சாத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள ஒத்தையால், புதுசூரங்குடி, பந்துவார்பட்டி, ஒ.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் ஆண்டுதோறும் பருத்தி, கம்பு, சோளம், குதிரைவாலி,மக்காச்சோளம் விதைப்பு செய்து வருகின்றனர். இந்தாண்டு விவசாயிகள் தங்களின் நிலங்களில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர். சில இடங்களில் மக்காச்சோளம் 10 நாட்கள் பயிராக வளர்ந்து உள்ளது.

The post சாத்தூரில் மக்காச்சோளம் நடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: