சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு

குடியாத்தம், செப்.20: குடியாத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். குடியாத்தம் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: