நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.24 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரையும் 10 நாள் காவலில் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கோரினர். செப்டம்பர் 3-ம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் தேவநாதனை ஆஜர்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: