இந்த வங்கி மோசடி தொடர்பாக தேவநாதனின் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 6 லாக்கர்களை திறக்க உள்ளோம். மேலும் 300 கோடி ரூபாயை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, தேவநாதன் உள்பட மூவரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது தேவநாதன் உள்பட 3 பேரும் நேரில் ஆஜர்படுத்தபட்டனர். இதையடுத்து, மூவரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ரூ.300 கோடி எங்கே? தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.