கோயிலில் சாமி ஆடிய பெண் கழுத்தை அறுத்து தற்கொலை

போளூர்: வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் சவுரி முடி விற்கும் தொழிலாளி முத்துவேல்(38). இவரது மனைவி சத்யாவுக்கு(34) சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர், நல்ல தண்ணீர் குளம் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் பரிகாரம் செய்தால் குணமாகும் என்று கேள்விப்பட்டு முத்துவேல், மனைவி சத்யா, அவரது அக்கா பூங்காவனம்(40), இவரது மகள் கலைவாணி(21) ஆகியோருடன் நேற்று மாலை 4 மணியளவில் கோயிலுக்கு வந்தார்.
அங்குள்ள அரச மரத்தடியில் நின்றிருந்த சத்யா திடீரென சாமி வந்து ஆட தொடங்கினார். திடீரென அங்கிருந்த அரிவாளை எடுத்து தனது கழுத்தை தானே கொண்டார். இதில் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சத்யா துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கோயிலில் சாமி ஆடிய பெண் கழுத்தை அறுத்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: