பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளர் சசிகலா சிதம்பரம் தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், கிருஷ்ணகிரி நிர்வாக மாவட்ட பதிவாளர் சங்கர் கன்னியாகுமரி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் நிர்வாக மாவட்ட பதிவாளர் பூங்கொடி அரியலூர் தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், அரியலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியன் கிருஷ்ணகிரி நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பாளையங்கோட்டை தணிக்கை மாவட்ட பதிவாளர் சிவலிங்கம் நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பதிவுத்துறை தலைவர் அலுவலக மாவட்ட பதிவாளர் சுனிதா தாம்பரம் தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், கன்னியாகுமரி தணிக்கை மாவட்ட பதிவாளர் மகாலட்சுமி விருத்தாசலம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், கள்ளக்குறிச்சி தணிக்கை மாவட்ட பதிவாளர் ரகுமூர்த்தி வட மற்றும் தென் சென்னை சீட்டு நடுவராகவும், உதகை தணிக்கை மாவட்ட பதிவாளர் லெட்சுமிபிரியா பதிவுத்துறை பயிற்சி நிலைய விரிவுரையாளராகவும், புதுக்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் பவானி பதிவுத்துறை தலைவர் அலுவலகம் வழிகாட்டி மாவட்ட பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: