விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.21: கிருஷ்ணகிரியில் வருகிற 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக 2வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், வருகிற 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடக்கிறது. எனவே, இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: