பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, ஆக.20: கிருஷ்ணகிரி பழையபேட்டை ராகவேந்திரர் கோயிலில், ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி, நேற்று காலை 6.30 மணிக்கு நடந்தது. இதில், ஆரிய வைஷ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு பூஜைகள் செய்து, காயத்ரி மந்திரங்களை சொல்லி, தங்களின் பழைய பூணூலை எடுத்து விட்டு, புதிய பூணூலை அணிந்து கொண்டனர். அதே போல், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜகத்குரு சங்கர மடத்தில், பிராமணர் நலச்சங்கம் சார்பில், ரிக், யஜூர் வேத உபாகர்மா நடந்தது. மேலும், காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் சிவன் கோயிலில், வன்னிய குல சத்ரியர்கள் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, பூணூல் அணிந்து கொண்டனர்.

The post பூணூல் மாற்றும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: