17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

கிருஷ்ணகிரி, ஆக.15: கிருஷ்ணகிரி அருகே 17வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது, மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி குழந்தைகள் நல அலுவலர் அலமேலு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், கிருஷ்ணகிரி அடுத்த உப்புக்குட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கோவிந்தன்கொட்டாய் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி பச்சையப்பன் (25) என்பவருக்கும், கடந்த ஜூலை 24ம் தேதி உப்புக்குட்டை முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. பச்சையப்பனின் தாய் கோவிந்தம்மாள் மற்றும் சிறுமியின் தாய் மாரி ஆகியோர், இந்த குழந்தை திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சிறுமிக்கு கட்டாய திருமணம் ெசய்து வைத்த பச்சையப்பன், கோவிந்தம்மாள், மாரி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: