மானூர் ரஸ்தா, தென்கலம் புதூர் பகுதியில் 12ம் தேதி மின்தடை

தியாகராஜா நகர், ஆக.9: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மானூர் ரஸ்தா, தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம் பகுதிகளில் வரும் 12ம் தேதி மின் விநியோகம் தடைசெய்யப்படுவதாக நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் (12ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக மானூர் வட்டாரம், ரஸ்தா, தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம், தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் (12ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மானூர் ரஸ்தா, தென்கலம் புதூர் பகுதியில் 12ம் தேதி மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: