இரணியல் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர்கள் மீது வழக்கு

 

திங்கள்சந்தை, ஆக. 5: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் கண்டன்விளை, மணக்கரை நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திய முருகன் (40), கிருஷ்ணமணி (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பொது வெளியில் அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த மீதம் மதுவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரணியல் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: