குவாகத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

ஜெயங்கொண்டம், ஆக. 1: குவாகம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட சிறப்பு முகாமை, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆண்டிமடம் ஒன்றியம், குவாகம் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். நிகழ்வில் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி (வட்டார ஊராட்சி), ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கலியபெருமாள், ஆண்டிமடம் வேளாண்மை அட்மா குழு தலைவர். தர்மதுரை, ஊராட்சிமன்றத் தலைவர்கள் கோகிலா காமராஜ் (குவாகம்), ஆனந்தி அன்பழகன் (வல்லம்), ராமசாமி (இடையக்குறிச்சி), மேகலா சக்திவேல் (கொடுக்கூர்), சரஸ்வதி பன்னீர்செல்வம் (மருதூர்), அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post குவாகத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: