காஷ்மீர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர்.  ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் இருந்து சிந்தன் டாப் வழியாக மார்வா பகுதிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் சென்றனர். அனந்த்நாக் மாவட்டம் டாக்சம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 முதல் 16 வயதுக்குள்பட்ட 5 குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு காவலர் உள்பட காரில் சென்ற அனைவரும் பலியாகினர்.

The post காஷ்மீர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: