அதில், இறந்த நபர் அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்த ராகவன்(52) என்பதும், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்த இவர், பணி மாறுதல் பெற்று அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு எஸ்எஸ்ஐயாக பொறுப்பேற்றதும் தெரியவந்தது. இவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்கி இறந்தாரா? அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்எஸ்ஐ ராகவனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
The post ரயிலில் பாய்ந்து திருவள்ளூர் எஸ்எஸ்ஐ தற்கொலை? appeared first on Dinakaran.