சரக்கு வேன் உரிமையாளர் கொலையில் 4 பேர் கைது

 

சிவகங்கை ஜூலை 27: சிவகங்கை காளவாசல் பகுதியில் வசித்து வந்தவர் ராஜபாண்டி(40). சரக்கு வேன் உரிமையாளரான இவரை நேற்று முன்தினம் இரவு கத்தியால் குத்தி ஒரு கும்பல் கொலை செய்தது. இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்த தற்போது பரமக்குடியில் வசிக்கும் இத்திராஜா(24) அவரது தம்பி தீனா(18) மற்றும் சிவகங்கை ராஜா சத்திரம் தெருவை சேர்ந்த முத்துக்குமார்(26), காமராஜர் காலனியைச் சேர்ந்த கவுதம்(22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, கொலை வழக்கில் இத்திராஜா உள்ளிட்டோர் குற்றவாளியாக உள்ளனர்.

The post சரக்கு வேன் உரிமையாளர் கொலையில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: