இளையான்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு முதலமைச்சரின் கேடய விருது

இளையான்குடி, ஜூலை 27: இளையான்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு முதலமைச்சரின் கேடய விருது கிடைத்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்தும் வகையில், போலீசாரின் சேவை மற்றும் திறன் மேம்பாடு ஆகிய அளவீடுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கேடய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கோப்புகள் பராமரிப்பு, சட்டம், ஒழுங்கு, நீதிமன்ற வழக்கு தீர்ப்புக்கான ஒத்துழைப்பு, கைதிகள் ஆஜர், வருகைப் பதிவு, ஆகியவற்றின் அடிப்படையில் கடந்த 2022-2023ம் ஆண்டிற்கான விருதிற்கு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி போலீஸ் ஸ்டேசன் தேர்ந்தெடுக்கப்பட்டது. கேடயத்தை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த போலீஸ் ஸ்டேசனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், இளையான்குடி போலீசாரை பாராட்டினார்.

The post இளையான்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு முதலமைச்சரின் கேடய விருது appeared first on Dinakaran.

Related Stories: