ஈரோடு, ஜூலை 27: பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த முருக செல்ல பெருமாள் (50), கோணவாய்க்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா (21), திருப்பூர் மாவட்டம், காங்கயம், சக்தி வினாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த செந்தில்குமார் (47), ராமநாதபுரம் மாவட்டம், வீரபச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் (40), சேலம் மாவட்டம், கல்வடங்கம், அங்காளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த கார்த்திக் (35), தூத்துக்குடி மாவட்டம், புதுப்பட்டி, தெற்கு வீதியை சேர்ந்த சிவகுமார் (55), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, பழக்குளம் பகுதியைச் சேர்ந்த முகிலன் (22), ஈரோடு, சின்னவலசு பகுதியை சேர்ந்த அப்துல்சலாம் (61) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். மேலும், சூதாட பயன்படுத்தப்பட்ட 52 சீட்டுகள், 627 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post பவானி அருகே சூதாட்டம்; 9 பேர் கைது appeared first on Dinakaran.