மின் ஊழியர் நெஞ்சு வலியால் பலி

 

கோபி, அக்.14: கோபி அருகே உள்ள அரசூர் அண்ணா நகரில் மின் வாரிய ஊழியர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். கோபி அருகே உள்ள அரசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் நஞ்சன் மகன் சம்பத் (52). இவர் அரசூர் மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த சம்பத் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சம்பத் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சம்பத்திற்கு யசோதா (42) என்ற மனைவியும், நிவேதா (19) என்ற மகளும், நிஸ்வின் (10) என்ற மகனும் உள்ளனர்.

 

The post மின் ஊழியர் நெஞ்சு வலியால் பலி appeared first on Dinakaran.

Related Stories: