கஞ்சா விற்றவர் கைது

 

ஈரோடு, அக். 17: அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட கால்நடை மருத்துவமனை ரோட்டில் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர், காமாட்சிகாடு பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (19), என்பது தெரியவந்தது.
மேலும், அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.2,300 மதிப்பிலான 230 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: