சேவல் சண்டை: 3 பேர் கைது

 

ஈரோடு, அக். 17: ஓட்டக்குளம் அருகில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் ஒரு கும்பல் சேவல் சண்டை நடத்தி வருவதாக சென்னிமலை போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் சென்னிமலை, கல்லாங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (46), புதுப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (32), காந்திநகர் முதல் வீதியை சேர்ந்த கோகுல் (54), என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 சேவல்கள், பணம் ரூ.240 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

The post சேவல் சண்டை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: