ஈரோடு தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடுகள்

 

ஈரோடு, அக். 15: ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தீ மற்றும் அசாம்பாவித சம்பவங்களை கையாள ஏதுவாக முதற்கட்டமாக தீயணைப்பு வீரர்கள் தீபாவளி பண்டிகை நிறைவு பெறும் வரை விடுமுறை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமாக விடுமுறை தேவைப்படுபவர்கள், அதற்கான காரணத்தை தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்ற பிறகே விடுமுறை எடுக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: