மார்பிங் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிடுவதாக ஆண் நண்பர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை: சாலிகிராமம் மதியழகன் நகரை சேர்ந்தவர் சிந்து (17, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பி.காம் படித்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நபர், காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் சிந்து அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆண் நண்பர், உனது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிந்து, நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, ஆண் நண்பரின் ஐடியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்பிங் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிடுவதாக ஆண் நண்பர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: