இந்த வழக்கை கடந்த 22ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி அமர்வு, கடைகளில் பெயர், முகவரி எழுதும் உ.பி., உத்தரகாண்ட் அரசுகளின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி அமர்வு, “நாங்கள் கடந்த 22ம் தேதி அளித்த எங்கள் உத்தரவில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை தெரிவிக்கும்படி யாரையும் உத்தரவிட முடியாது” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். .
The post கன்வார் யாத்திரை விவகாரம் உ.பி., உத்தரகாண்ட் அரசுகளுக்கு விதித்த தடை ஆக.5 வரை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.