திண்டுக்கல்லில் திமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 26: திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், உணவு- உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளர், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு: ஒன்றிய பட்ெஜட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜ அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 27ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் கிழக்கு- மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை சனிக்கிழமை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை செயலாளர்கள்- நிர்வாகிகள், அனைத்து ஊரக- நகர்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டு கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல்லில் திமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: