வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி, ஜூலை 25: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது நிலையின் 2வது அலகில் கடந்த நேற்று கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது நிலையின் 1வது அலகில் ஏற்கனவே நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

The post வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: