அதே நேரத்தில் ஜிம்பாப்வேயின் மேயர்ஸ், கிளைவ் இணை சிறப்பாக விளையாடிய போது எங்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர்களை கட்டுப்படுத்த எங்களால் இயன்ற திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். அதனை செயல்படுத்தியதில் பலன் கிடைத்தது. சனிக்கிழைமை நடைபெறும் 4வது ஆட்டத்தில் வெல்வதின் மூலம் தொடரை கைப்பற்றுவோம் ’ எனறார். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா, அடுத்த 2 ஆட்டங்களிலும் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
The post ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்: வாஷிங்டன் சுந்தர் appeared first on Dinakaran.