ஆனால் புதிய சட்டத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதிலாக ஒரு ஆர்.டி.ஓ அல்லது டி.ஆர்.ஓ இதை விசாரிப்பார் என்று சொல்கிறது. இது நிச்சயம் மக்கள் சார்புள்ளதாக இருக்காது. மேலும் குற்றச்சாட்டப்பட்டவரை கைவிலங்கு போடக்கூடிய அந்த பழைய காட்டுமிராண்டி முறையை புதிய சட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. எனவே, இந்த மூன்று சட்டங்களும் குப்பைத் தொட்டியில் வீசப்படும் வரையில் போராட்டம் ஒற்றுமையோடு தொடரும் என்றார். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் எம்.ஜெயினுல் ஆபிதீன், வழக்கறிஞர் சைத் அபுதாஹிர் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
The post 3 புதிய சட்டங்களையும் குப்பையில் வீசும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும்: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேச்சு appeared first on Dinakaran.