சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக மழலையர் பள்ளி திறப்பு

சீர்காழி, ஜூலை 4: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக மழலையர் விளையாட்டுப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. குட்சமாரிட்டன் நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் டாக்டர் ஆர் கே வி அரங்கில் புதியதாக குளிரூட்டப்பட்ட அறைகளுடன் விளையாட்டுடன் கல்வி கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆலிவ் ட்ரி எனும் மழலையர் பள்ளி தொடக்கவிழா பள்ளித் தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநர்கள் பிரவீன் வசந்த் ஜெபேஸ், அனுஷா மேரி, குட்சமாரிட்டன் மெட்ரிக் பள்ளி இயக்குநர்கள் அலெக்சாண்டர் ஹெப்லின் இசையா, ரினிஷா ஜெனி முன்னிலை வகித்தனர். விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார். புதிய பள்ளிக் கட்டிடத்தை செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார். விழாவில் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் ஆபிரகாம், மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் சரோஜா தாமோதரன், ஆசிரியைகள் வானதி, இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நர்சரி, பிரைமரி பள்ளி முதல்வர் தீபாபிள்ளை நன்றி கூறினார்.

The post சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக மழலையர் பள்ளி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: