பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

 

விருதுநகர், ஜூலை 3: பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் சிவகாமிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் நின்றிருந்த அய்யனார் நகர் பாண்டியராஜன்(25), ஷிஜி(22) இருவரையும் பிடித்து விசாரித்தனர். இருவரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா பாக்கெட்டுகளை வைத்திருந்தனர்.

இதையடுத்து இருவரையும் மேற்கு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 26 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல், சிவன்கோவில் தெரு கழிப்பிடம் அருகில் நின்றிருந்த புனிதராஜ்(22) என்ற நபரை பஜார் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து புனிதராஜை கைது செய்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: