வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

நரசிங்கபுரம், ஜூலை 5: ஆத்தூர் கோட்டை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை வந்து பார்த்த போது, வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் பலியாகி இருந்தது. மேலும் சில ஆடுகள் காயமடைந்திருந்தன. அந்த பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் திரிவதால், பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே, வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: