பல்கலை துணைவேந்தர் பதவி நீட்டிப்பு ஊழல்வாதிக்கு ஆளுநர் துணைபோவதா? ஜவாஹிருல்லா கேள்வி

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல.

பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து துணைவேந்தருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் ஆளுநர் ரவி செய்துகொண்டிருக்கிறார். இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களின் வருகை தொடங்க இருக்கும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல்வாதிக்கு துணை போகும் ஆளுநரை கடுமையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பல்கலை துணைவேந்தர் பதவி நீட்டிப்பு ஊழல்வாதிக்கு ஆளுநர் துணைபோவதா? ஜவாஹிருல்லா கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: