வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!!

லண்டன் : வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியான தொழில் அதிபர் விஜய் மல்லையாவிற்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பிரபல தொழில் அதிபரும் கிங் பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய 180 ரூபாய் கோடி கடன் மற்றும் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக்காமல் 2016ம் ஆண்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் மீதான மோசடி வழக்கு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அவர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தற்போது லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னரும் பலமுறை விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும் அவரை கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிபிஐ பிடிவாரண்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: