கடமலைக்குண்டுவில் சேதமடைந்த வேளாண் அலுவலக கட்டிடம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை

 

வருசநாடு, ஜூன் 29: கடமலைக்குண்டுவில் சேதமடைந்த நிலையில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, கண்டமனூர் மயிலாடும்பாறை, வருஷநாடு தும்மக்குண்டு, மூலக்கடை, குமணந்தொழு தங்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களை மையமாக வைத்து கடமலைக்குண்டுவில் வேளாண்மை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, அதில் உள்ள சென்ட்ரிங் கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன. இந்த கட்டிடத்தை சீரமைக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இங்கு பணி புரியும் பணியாளர்கள் நலன் கருதி, இந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கடமலைக்குண்டுவில் சேதமடைந்த வேளாண் அலுவலக கட்டிடம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: