அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு

சிவகங்கை, ஜூன் 29: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 2023-2024ம் கல்வியாண்டிற்கான அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு சார்பில் கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளிசெயலர் சேகர் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை மாலை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

The post அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: