ஆம்னி காரில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், ஜூன் 29: ஜெயங்கொண்டம் அருகே ஆம்னி காரில் மதுபானம் கடத்திய இருவர் சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள உடையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கமலேஷ் (22).இவரும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ரவிச்சந்திரன் (22) ஆகியோர் ஒரு ஆம்னி காரில் கும்பகோணம் நோக்கி சென்றனர்.அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை வடவார் சோதனை சாவடியில் மீன்சுருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனசெல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு ஆம்னி காரில் 750 மில்லி கொண்ட இரண்டு பிராந்தி பாட்டில்கள்,500 மிலி கொண்ட இரண்டு பிராந்தி பாட்டில்கள்,750 மிலி கொண்ட ஓயின் பாட்டில் ஒன்று,5 குவாட்டர் பாட்டில் ஓயின் என, ஆகமொத்தம் பத்து மது பாட்டில்களை கைப்பற்றி கமலேஷ், ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆம்னி காரில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: