ராமேஸ்வரத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

ராமேஸ்வரம், ஜூன் 29: ராமேஸ்வரம் 8வது வார்டில் உள்ள ராமநாதசுவாமி நகரில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அரசால் வழங்கப்பட்ட இலவசமாக வீட்டு மனையில் சுமார் 60 வீடுகள் உள்ளன. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இடையூறாக பிரச்சனைக்குரிய வகையில் பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் வீர ராஜா, ராமேஸ்வரம் தாசில்தார் செல்லப்பா, வீஏஓ அனுராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இனைந்து ராமநாதசுவாமி நகர் அரசு பள்ளி எதிரே பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் பாதைக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு தடுப்பு வேலிகளும் அகற்றப்பட்டது. இதற்கு டிஎஸ்பி உமா தேவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ராமேஸ்வரத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: