மீன் பிடிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி பலி

 

விருதுநகர், ஜூன் 28: மீன்பிடிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார். விருதுநகர் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் காளிராஜ்(38). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த காளிராஜ் நேற்று முன்தினம் ஊரில் உள்ள தாதபெருமாள் கண்மாயில் மீன் பிடிக்க செல்வதாக மனைவி ராஜேஸ்வரியிடம் கூறி சென்றுள்ளார்.

இரவு வரை காளிராஜ் வீடு திரும்பவில்லை. கண்மாய் கரை மற்றும் காடுகளில் தேடினர். அப்போது கண்மாய் நீரில் காளிராஜ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். ஆமத்தூர் போலீசில் மனைவி ராஜேஸ்வரி புகார் அளித்ததன் பேரில் காளிராஜ் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மீன் பிடிக்க சென்றவர் கண்மாயில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: