இருசக்கர வாகனம் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்சேகர் (21). இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து இருசக்கர வாகனம் திருடப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.

The post இருசக்கர வாகனம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: