ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது குற்றங்கள் குறையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்ற வழக்குகளில் அரசு சார்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர் என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post ஆணவக்கொலை வழக்கு: பெண் கல்வி, பொருளாதாரம் உயரும் போது குற்றங்கள் குறையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: