இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண் திருமணம் ஆனவர். அவர் கடந்த ஜூன் 20ம் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு ஆணுடன் சென்றுவிட்டதால் அந்த பெண்ணை கண்டுபிடித்து தாக்கியதாக கூறப்படுகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒன்றிய இணை அமைச்சர் சாவித்ரி தாகூரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சர்ச்சையானதால் பெண்ணை அடித்த பஞ்சாயத்து தலைவர் நூர்சிங் பூரியா உள்பட 7 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
The post ஒன்றிய மகளிர் நலத்துறை அமைச்சர் தொகுதியில் காதலனுடன் சென்ற பெண்ணை நடுரோட்டில் கும்பல் சித்ரவதை: வீடியோ வைரலானதால் சர்ச்சை appeared first on Dinakaran.