அரியலூர் நீதிமன்றம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், ஜூன் 21:சமஸ்கிருத மொழியில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டத்திருத்தங்களை திரும்ப பெறக்கோரி அரியலூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், சமஸ்கிருத மொழியில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். வழக்குரைஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.செயலர் முத்துக்குமரன், வழக்குரைஞர்கள் பாரி வள்ளல், சுகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

The post அரியலூர் நீதிமன்றம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: