மதுபோதையில் தொழிலாளி தற்கொலை

ஈரோடு, ஜூன் 20: கோபி தங்கமணி விரிவாக்கப்பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(51). தொழிலாளியான இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோவிந்தராஜ்க்கு பல்வேறு வகையான உடல்நிலை பாதிப்புகள் இருந்து வந்துள்ளது.

இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ் நோயுடன் வாழ்வதை விட செத்து போய்விடுவது நல்லது என்று கூறி போதையில் கூறியுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுபோதையில் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: