கடத்தூரில் பாமக ஆலோசனை கூட்டம்

கடத்தூர், ஜூன் 19: கடத்தூரில் பாமக ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி, வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி குறித்து மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பாமக தலைவர் அன்புமணி, நேர்முக உதவியாளர் சொல்லின்செல்வன், இளைஞரணி மாநில செயலாளர் செந்தில், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், சிவகுமார், வணங்காமுடி, மாது, திருவேங்கடம், ஒன்றிய செயலாளர் சின்ராஜ், செல்வம், கலைமணி, செய்தி தொடர்பாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கடத்தூரில் பாமக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: