திண்டுக்கல்லில் டூவீலர் கவிழ்ந்து வெல்டிங் தொழிலாளி பலி

திண்டுக்கல், ஜூன் 18: திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜா (40). இவர் திண்டுக்கல் சிறுமலை பிரிவில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 14ம் தேதி டூவீலரில் சிறுமலை பிரிவில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஜோசப் ராஜா வந்து கொண்டிருந்தார். அப்போது அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அருகே டூவீலரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ஜோசப் ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசப் ராஜா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் டூவீலர் கவிழ்ந்து வெல்டிங் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: